பாம்புகள் நகரம் (கற்பனை கதைகள் )
இங்கு பகிர படும் கதைகள் எனது சொந்த கற்பனைகள் மட்டுமே,பொழுது போக்கின் அடிப்படையில் கதைகளை விரும்புபவர்களுக்காக எழுதப்படுகிறது ,நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருக்க இதை நீக்கிட விரும்புகிறேன் .. அது ஒரு அமைதியான மதியம்,நாய்களுக்கு உணவு அளித்துவிட்டு .. கோவிலுக்குள் சென்ற தந்தையை காண சென்றேன். அவர் கோவில்களை பற்றியும் இதிகாசங்கள் புராணங்கள் பற்றியும் நன்கு அறிந்திருக்கும் நபர். கோவிலை விட்டு வெளியே வந்தார் நான் என் தந்தையிடம் இங்கு நான் அவ்வப்போது காணும் விசித்திரமான மனிதர்களை பற்றி கூறி வருவேன். அவர் அது எனது கற்பனை மற்றும் பயம் என் று கூறி தைரியம் சொல்ல அந்த மர்ம நபர்கள் கூட நல்லவர்களாக கண் களுக்கு தெரிவார்கள். நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த போது.ஒரு கூட்டம் எங்கள் கண் முன்னே நின்றது.நொடி பொழுதில் இங்கே எண்ண நடந்து இருக்கும் என்று முன் சென்று பார்க்க, மனிதனை விழுங்க கூடிய அளவில் மிக பெரிய மலைப் பாம்புகள் மயக்கஊசிகள் செலுத்தபட்டு வாய்கள் கட்டப்பட்டு காவலர்கள் துணையுடன் வாகனங்களில் ஏற்றி செல்லபட காத்திருந்தன. நாங்கள் அதை கடந்து எங்கள் வீட்டிற்குள் சென்றோம். இந்த ...