புதிதாக நாய்கள் வளர்ப்பு தேவையான சில அறிவுரைகள்
செல்ல பிராணியை அன்போடு பராமரிக்கும் முறைகள் * நாய்கள் வளர்ப்பது அவசியம்.அவற்றுடன் பேசுவதால் நமது மன சுமைகள் குறைகின்றன. நன்றிக்கு மட்டுமல்லாது என்றும் நம்முடைய அணைத்து பாதைகளிலும் பின் தொடரும் நண்பன். *உங்கள் செல்ல பிராணியை கட்டி வைக்காதீர்கள். *அவை ஏதேனும் பொருளை நாசம் செய்வதை தடுக்கலாம் ஆனால் ஒரு போதும் அடிக்காதீர்கள்.மாறாக குரலை உயர்த்தி மிரட்டினால் போதும்.நீங்கள் அவற்றை அடிப்பதால் உங்கள் மீது அவற்றின் நம்பிக்கையை இழப்பீர்கள். ₹299.00 *சரியான நேரத்திற்கு உணவு அளியுங்கள்.உணவு அளித்த பின் அவற்றை வெளியே சென்று தானாக உண்டதை வெளியேற்ற சுதந்தரமாக வெளியே விடுங்கல்.உதாரணமாக இரவு எட்டு மணிக்கு உணவு அளித்தால் எட்டு மணி முதல் பத்து மணிவரையில் வெளியே விட்டு விடுங்கள்.அதற்கு அவற்றை கட்டி வைத்து அழைத்து சென்று பழக்க தேவையில்லை.உணவில் இறைச்சி,தயிர்,பால்,முட்டை,ராஃஹி கூல் போன்றவற்றை கொடுக்கலாம். அதிக அளவில் பெடிகிரி போன்றவற்றை வாங்க இயலாத நிலையில் ஐந்து ருபாய் கோதுமை பிஸ்கட்கலை வாங்கிவைத்து தினமும் தரலாம். *...