பாரம்பரிய வீட்டின் அம்சங்கள்



அசர வைக்கும் தமிழர்களின் வீடு கட்டும் முறை  என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்து வந்தவாரே உள்ளது.
தற்காலத்திலும் இது போன்ற அம்சங்களுடன் கட்டப்படும் வீடுகள்  தனித்தன்மையுடனும் அமைதியுடனும் தோற்றமளிக்கிறது.
பல வருடங்களில் பல வழிமுறைகள் ,பாரம்பரியங்கள்,கலைநுட்பங்கள்  சில மறைந்தும் சில மாறுதல் பெற்றும் நம்மிடம் வந்து சேரும்பொழுது.
இருபத்தையாவது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு வரவேண்டும்.
இதுபோன்ற வீடுகட்டும் முறை தற்போது குறைந்துவருவதால்  நம்முடைய நலனில் பாதிப்பும் வருகின்றன. 
பழங்காலத்து வீடுகள் கூட பல ரகசியங்களையும்,நன்மைகளையும்  உள்ளடக்கியே கட்டப்படுகின்றன.
மனம் சார்ந்தும்,சுற்றுசூழல் சார்ந்தும் வீட்டில் அமைதியையும் , நிம்மதியையும் தருவதாக வீட்டின் அமைப்புகள் இருந்துள்ளது.
இது போன்ற சுற்றம் அமைப்பு உள்ள வீடுகளை  இன்று கட்டுவதற்கு கோடி பணம் ஈடாகாது.
நான் கண்ட சில அம்சங்களை ஆர்வத்துடன் இங்கே பகிரவுள்ளேன் .

உணவு சமைக்கும் இடம் 
பொதுவாக உணவுகள் விறகுகளை கொண்டு அப்போது சமைக்கப்பட்டதால் சமையலறை உள்ளே மற்றும் வெளியவும்  இருந்து உள்ளது.  பச்சை மரங்கள் நிறைந்த கொல்லைப்புறம் அல்லது வீட்டின் முன் உள்ள  சுதம்மான  அகண்ட இடத்திலும் பெண்கள் அமர்ந்து   சமைப்பர்.
சமைப்பதற்கு மிகவும் தனித்தன்மைவாய்ந்த  களிமண்ணால் அடுப்புகளையும்  உருவாக்கி இருந்தனர்.
திண்ணை
ஒரு சில வீடுகளில் அமர்ந்து பேசவும், வழியில் செல்பவரிடம் பழகவும்,ஓய்வெடுக்கவும், நண்பர்கள் அமர்ந்து விளையாடவும் இதுபோன்ற அமைப்புகள் வீட்டின் முன் அமையப்பெற்றிருக்கும்.திண்ணை என்றால் வீட்டில் முதியவர்களுக்கு பிரியம்.

பாத்திரங்கள் துலக்கும் இடம் 
பாத்திரங்கள் தேங்காய் மஞ்சி ,சுன்னாம்பு போன்றவற்றை பயன்படுத்தி துலக்கப்படும்.துலக்கப்படும் இடம் கொல்லைப்புறத்தில்  சதுர அமைப்பிலான சிறி கட்டுமானம் போல் ஒன்றில் நீர் பரவாமல் பாத்திரங்கள் துலக்கப்படும். வீணாகும் நீர் நடப்பட்டிருக்கும் வாழைக்கும் மாதுளைக்கும்  செல்வதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் .
துணிகள் துவைக்கப்படும் இடம் கூட வீட்டில்  அவ்வாரே இருக்கும்  அதாவது தனி ஒரு துவைக்கும் கல்  அமைப்பு இருக்கும் அல்லது வீட்டை விட்டு சில தொலைவில் இருக்கும் .

அரைக்கும் இடும்
அரைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல் ,ஆட்டங்கள், உரல் போன்றவை கொல்லைப்புறம் அல்லது வீட்டின் முன் உள்ள இடத்தில் இருக்க செய்யப்பட்டிருக்கும்.

நீர் சேமிக்கும் தொட்டி
வீட்டின் முன் சதுர அளவில் ஒரு பெரிய தொட்டி அல்லது பெரிய சேமிப்பு தொட்டிகள் இருக்கும்

இதோடு நாம் மறந்த விஷயங்கள் நிற்கவில்லை, சுவர்கள் ,கதவுகள் கூட  மிகவும் வலிமையானதாகவும் திடமனாத் தோற்றத்துடனும் இருக்கும்.குளிர்காலங்களில் சுவர்கள் பாதுகாப்பாகவும் ஓடுகள் வெயில்காலங்களில் வெப்பத்தை தாங்குவதாகவும் இருக்கும்.குளிக்கும் அறையில் தண்ணீர் சூடாகும் அடுப்பு.வீட்டில் நிச்சயமாக ஒரு கனி அல்லது காய்கறிகள் தரும் செடிகள் என்று இருக்கும்....
இது மட்டுமே தற்போதைய என் அறிவுக்கு பெரிதாக தெரிகிறது.பண்டைய தமிழர்களின் நாகரிகங்களை  பற்றி  ஒரு அறிவும் என்னிடம் இல்லை ,ஆனால் அறிவதால் வாழ்வில் பல முன்னேற்றங்களை அடையலாம் என்பது உறுதி.

இதுபோன்ற அம்ஸங்களை பற்றிய படங்கள் கூட இல்லை...இது போன்ற வீடுகள் பாதுகாக்கப்படவேண்டும்

நன்றி 





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING