இடுகைகள்

சுற்றுச்சூழல் அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரம்பரிய வீட்டின் அம்சங்கள்

படம்
அசர வைக்கும் தமிழர்களின் வீடு கட்டும் முறை  என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்து வந்தவாரே உள்ளது. தற்காலத்திலும் இது போன்ற அம்சங்களுடன் கட்டப்படும் வீடுகள்  தனித்தன்மையுடனும் அமைதியுடனும் தோற்றமளிக்கிறது. பல வருடங்களில் பல வழிமுறைகள் ,பாரம்பரியங்கள்,கலைநுட்பங்கள்  சில மறைந்தும் சில மாறுதல் பெற்றும் நம்மிடம் வந்து சேரும்பொழுது. இருபத்தையாவது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு வரவேண்டும். இதுபோன்ற வீடுகட்டும் முறை தற்போது குறைந்துவருவதால்  நம்முடைய நலனில் பாதிப்பும் வருகின்றன.  பழங்காலத்து வீடுகள் கூட பல ரகசியங்களையும்,நன்மைகளையும்  உள்ளடக்கியே கட்டப்படுகின்றன. மனம் சார்ந்தும்,சுற்றுசூழல் சார்ந்தும் வீட்டில் அமைதியையும் , நிம்மதியையும் தருவதாக வீட்டின் அமைப்புகள் இருந்துள்ளது. இது போன்ற சுற்றம் அமைப்பு உள்ள வீடுகளை  இன்று கட்டுவதற்கு கோடி பணம் ஈடாகாது. நான் கண்ட சில அம்சங்களை ஆர்வத்துடன் இங்கே பகிரவுள்ளேன் . உணவு சமைக்கும் இடம்  பொதுவாக உணவுகள் விறகுகளை கொண்டு அப்போது சமைக்கப்பட்டதால் சமையலறை உள்ளே ...

இயற்கைக்கு பெரும் அளவில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கு

படம்
பிளாஸ்டிக் நச்சு தன்மை கொண்ட  கார்பன் பாலிமர்  என்ற வேதியியல் முறையில் செயற்கையாக செய்யப்படும் பொருளாாகும். இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியால்  கண்டுபிக்கப்பட்டது. இன்று உலகில் பெரும் பொருட்களை எளிதாக பேக்கிங் செய்யவும் அவற்றை சந்தையில்  பரிமாறவும் உதவியாக உள்ளது. பிளாஸ்டிக்  மிகவும் மலிவான விலையில் விற்கப்படும் இயற்கையை  அளிக்கும்  விஷ  பொருள் என்றே கூறலாம்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் சில தரங்கள் வகுக்கப்பட்டு உள்ளன அவை அவற்றின் மக்கும் தன்மையை பொருத்தும்,அதில் சேர்க்கப்படும் நசித்து தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கொண்டும் பிரிக்கப்படுகின்றன. இன்று சில வகை பிளாஸ்டிக் பாகுகளை,பொருட்களை தடை செய்து உள்ள சிலநாடுகள்  கரணம் அவை மண்ணில் சேர்ந்தபின் எளிதில் மக்குவதும் இல்லை மேலும் அதில் பயன் படுத்தும் பொருட்கள் நஞ்சாக மாறுவதும் தான். மாற்றுவழி ஏன் அவசியம்: பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களால்  அனைத்திற்கும் பயன்படுத்த படுகிறது. உணவு உன்னும் பாத்திரம் துவங்கி நீர் குடுகைகள் வரை பயண்படுத்த படும் பிளாஸ்டிக் பா...

நுண்ணுயிர்கள் வளர்க்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

படம்
தரமற்ற பிளாஸ்டிக் பாட்டல்களில் நீர் பருகுவதை தவிர்க்கவேண்டும்  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் விலை மலிவான பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகித்து வந்திருக்கிறோம்.மேலும்  தரமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை   எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பார்ப்போம். உங்களது பிளாஸ்டிக் பாட்டில்களின் அடிபாகத்தில் அல்லது வேறிடத்தில் எண்கள் பதிக்கப்பட்டிருக்கும்.அந்த ஒவ்வொரு  எண்களுக்கும் அர்த்தம் இங்கே தரப்பட்டுள்ளது . கவனமாக  பயன்படுத்த வேண்டும்  உபயோகிக்கலாம்  உபயோகிக்கக்கூடாது  தரமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் பருகுவதால். பிளாஸ்டிக் சிறிய அளவில் உடலில் சென்றடைகிறது. இது புற்றுநோயை உண்டாகும் என்பது ஆராய்ச்சிகளின் கூற்று. வீட்டில் உள்ள பெரியவர்கள் கோடைகாலங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் நீர் அல்லது ஏதேனும் ஜூஸ் அல்லது மோர் சேர்த்து பாட்டில்களை  குளிர் சாதன பெட்டிகளில் வைப்பார்கள் .அவ்வாறு ஒரு போதும் செய்யாதீர்கள். உங்களது பிளாஸ்டிக் பாட்டில்  தரமற்றதாக இருப்பின் அந்த பாட்டில்களை நீங்கள் ஒவ்வ...

பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் பாக்டீரியா எங்கிருந்து வந்தது

படம்
பிளாஸ்டிக் பொருட்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து சுமார் எழுபது  ஆண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.அப்படி இருக்கும் பொழுது சில நுண்ணுயிர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அளவிற்கு திறனை எங்கிருந்து பெற்றுள்ளது என்பது ஒரு கேள்வியாக உள்ளது . 2016ஆம் ஆண்டு  kyoto institute of  technology ,ஜப்பான்  ஒரு குழு நடத்திய ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை உண்ணும் ஒரு புதுவகை பாக்டீரியா கண்டறியப்பட்டது. இயற்கைக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதில் உலக ஆராய்ச்சியாளர்கள் சமூக ஆர்வலர்கள் அக்கறை காட்டி வரும் வகையில் இந்த ஆராய்ச்சி அப்பொழுது ஒரு நம்பிக்கையை தந்துள்ளது. kyoto institute of technology சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஒரு குப்பைக்கிடங்கிற்கு சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரித்தனர் அதில் சில நாட்களுக்கு பிறகு  காலணிகளாக நுண்ணுயிர்கள் வளர்ந்து வந்துள்ளது. அந்த காலனிகளில் ஈஸ்ட் மற்றும் சில அறிந்த வகை பாக்டீரியாக்கள் இருந்துள்ளது. idonella sakiensis   என்று ஆராய்ச்சியாளர...

வீட்டில் செடிகளை வைப்பது சொர்க்கத்தில் இருக்கும் உணர்வை தரும்

படம்
வீட்டில் செடிகளை வைப்பது  சொர்க்கத்தில் இருக்கும்  உணர்வை தரும்  அன்றாடம் நம் வாழ்வில் நிகழும்   சம்பவங்களில் இருந்து விலகி சில மணி நேரம் நாம் தனிமையில் இயற்கையுடன் இணைந்து  அமைதியை உணர விரும்பிடுவோம். நமது வாழ்க்கையின் ஒரே நோக்கமும் நிம்மதி .ஆனால் நமது புதிய பழக்கவழக்கங்கள் கண்டுபிடிப்புகளால் நாம் சில பழைய பழக்கவழக்கங்களை  மறந்து  தொலைபேசியில் தொலைதூரம் சென்றுவிட்டோம் .இவற்றால் பாதிப்பு என்ன வென்றால் நமது மனம் ஒருவித அழுத்தத்துடன் என்றும் இருக்கிறது.அது நமது மற்ற பணிகளையும் சீர்குலைகிறது. வீட்டில்  செடிகள் மரங்கள் வளர்ப்பது  பறவைகளுக்கும் ,ஒரு சில சிறிய விலங்குகளுக்கும் உறைவிடமாகவும் அமைகிறது  வீட்டில் மனம் வீசும் மலர்கள் ,சுவையால் ஈர்க்கும் கனிகள் ,மனத்தால் நமது மன சுமைகளை குறைக்கும் மூலிகை செடிகள் ,மண்ணையும் ,காற்றையும்,நீரையும்  சுத்தம் செய்யும் செடிகள் , 60 பேர் சுவாசிக்கும் அளவிற்கு  தேவையான காற்றைத் தரக்கூடிய  மரவகைகள்  .இவற்றை வீட்டில் வைப்பதா...