நுண்ணுயிர்கள் வளர்க்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்


தரமற்ற பிளாஸ்டிக் பாட்டல்களில்
நீர் பருகுவதை தவிர்க்கவேண்டும் 

பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் விலை மலிவான பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகித்து வந்திருக்கிறோம்.மேலும் தரமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பார்ப்போம்.
உங்களது பிளாஸ்டிக் பாட்டில்களின் அடிபாகத்தில் அல்லது வேறிடத்தில் எண்கள் பதிக்கப்பட்டிருக்கும்.அந்த ஒவ்வொரு 
எண்களுக்கும் அர்த்தம் இங்கே தரப்பட்டுள்ளது .


கவனமாக  பயன்படுத்த வேண்டும் 
உபயோகிக்கலாம் 
உபயோகிக்கக்கூடாது 

தரமற்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் பருகுவதால்.
பிளாஸ்டிக் சிறிய அளவில் உடலில் சென்றடைகிறது.
இது புற்றுநோயை உண்டாகும் என்பது ஆராய்ச்சிகளின் கூற்று.

வீட்டில் உள்ள பெரியவர்கள் கோடைகாலங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் நீர் அல்லது ஏதேனும் ஜூஸ் அல்லது மோர் சேர்த்து பாட்டில்களை குளிர் சாதன பெட்டிகளில் வைப்பார்கள்.அவ்வாறு ஒரு போதும் செய்யாதீர்கள்.

உங்களது பிளாஸ்டிக் பாட்டில்  தரமற்றதாக இருப்பின் அந்த பாட்டில்களை நீங்கள் ஒவ்வொரு முறையும் திறந்து குடித்துவிட்டு மூடிவைக்கும் பொழுது உள்ளெ காற்றின் வழியாக நுழைந்த  நுண்ணுயிர்கள் மேலே அல்லது கீழிருந்து காலணிகளாக வளர்ந்து  வருகின்ற.இதில் கொடுரமான வைரசுகளும்  வளர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த நுண்ணுயிர் காலணிகளை கருப்பு புல்லிகளாக பாட்டில்களில் நம்மால் காண இயலும்.சிலர் இதை கவனிக்காமல்   அதை மீண்டும் கழுவி உபயோகிப்பது உண்டு,இவற்றை நாம் மீண்டும் மீண்டும் கழுவி உபயோகிக்கையில் அவற்றில் அதிக காலணிகள் உருவாவதை வெறும் கண்களால் பார்க்க இயலும்.மேலும் அதில் சேகரித்து வைத்துள்ள நீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு,சளி,இருமல்,தொண்டை புண் என பல நோய்களும் கூட வருகிறது.
இதுபோன்ற தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை நாம் பயன் படுத்துவதை தவிர்க்க மாற்றுவழியாக அலுமினியம் பாட்டில்களை பயன்படுத்தலாம்.அலுமினியும் பாட்டில்களையும்  சரியாக சுத்தம் செய்து பயன்படுத்தினால் நோய்கள் வராது.


நன்றி 






கருத்துகள்