மற்ற புராணங்களின்படி நிகழ்ந்தவை


கணேஷ புராணத்தின் படி நிகழ்ந்தவை  (900–1400 CE) 
விரோச்சன என்னும் அசுர இன தலைவன் சூரிய தேவரிடம் இருந்து ஒரு சக்திவாய்ந்த கிரீடத்தை பரிசாகப்பெற்றுக்கொள்கிறான் .அதை அவன் தவறாக பயன் படுத்த .விஷ்ணு தேவர் மோஹினி அவதாரம் எடுத்து அவனை ஏமாற்றி அவனிடம் இருந்து அதை திருப்பி எடுத்துவிடுகிறார்.

புத்த மதத்தில் சார்ந்த ஒரு நூலில் கூறப்பட்டவை 

விஷ்ணுபுராணத்தின் கூற்று படியே அங்கேயும் கூறப்பட்டுள்ளது .ஒரு மாற்றம் என்ன வென்றால் ,மோஹினி அசுரனை தன்னை விட்டு அவன் நீங்க மாட்டான் என்று தனது  தலையில் வைத்து  சத்தியம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறாள் .அவனும் அவனுடைய  தலையில் கையைவைக்கும் பொழுது சாம்பலாகிவிட்டான் என்று இந்த நூலில் கூறப்படுகிறது .

ராமாயணத்தை போல் "ராம்கியின்" (1967)என்னும்  தாய்லாந்தை சேர்ந்த நூலில் கூறப்பட்டவை 

நோன்டக் என்னும் அசுரன் சிவனிடம் தவம் இருந்து புனித ஆயுதத்தை பெற்றுவிடுகிறான் .அதைக்கொண்டு அவன் தீமையை அதிகம் செய்ய துவங்கினான் .இதை தடுப்பதற்கு விஷ்ணு மோஹினி அவதாரம் எடுத்திருப்பதாகவும் .பின் அவனை ஏமாற்றி அளிக்கும் பொழுது அவன் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அதை எப்போதும் தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூற.விஷ்ணு தேவர் அவனுக்கு ம்மீண்டும் ஒரு பிறவியை அளித்து அதில் அவன் பத்தலையுடைய ராவணனாக பிறந்து விஷ்ணுவின் மற்றொரு அவதாரம்மான ராம அவதாரத்தில் அவன் அளிக்கப்பெறுவான் என்று கூறி அவனை அளித்துவிடுகிறார் .

மற்றொரு தெற்கத்திய  புராணத்தின் படி சிவ பெருமானின் அம்சமும் மோஹினி அம்சமும் ஒன்றாக இணைந்து ஐயப்பன் தோன்றியதாக கூறப்படுகிறது .ஐயப்பன் மகிஷமுகி என்னும் அரக்கியை வீழ்த்தி .கலியுகத்தில் வாழும் மக்களுக்கு உதவி புரிய சபரி மலையில் அமர்ந்திருப்பதாகவும் இதுவே அவரது இந்த அவதாரத்தின் நோக்கமாகவும் கருதப்படுகிறது .

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"