யோகா முதல் பார்வை
உடல் ஆரோக்யத்திற்காகவும், மன ஆரோக்யத்திற்காகவும் யோகா என்னும் மிகவும் தொன்மையான கலையை செய்கிறோம் இதனால் நமக்கு கிடைக்கும் பயன் என்னவென்றால் நமது உடலும் மனமும் ஒன்றோடு இணைந்து கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் . உடலும் மனமும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதையே நாம் யோகம் என்று சொல்கிறோம். இதனது வடமொழி பெயரானது யுஜ் இதிலிருந்து தான் யோகா என்ற பெயர் தோன்றியது.
நீங்கள் யோகம் அடையவேண்டும் என்றால் முதலில்ஆசனம் செய்யவேண்டும் பிறகுபிராணாயாமம் (மூச்சு பயிற்சி )செய்யவேண்டும் , பிறகு உச்சாடணம் /மந்திரம் (ஓம் )என்பதை ஜபிக்க வேண்டும் பிறகே யோக நித்திரை என்னும் மனதின் ஆழ்ந்த அமைதியை அனுபவிக்க முடியும்.
இதில் ஒவொரு நிலையையும் விடா முயற்சியுடன் தினமும் பயிற்சித்து வந்தால் தான் யோகி யாக சாத்தியமாகும். அதுவும் எளிது அல்ல இவற்றை செய்வதற்கு பல கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் உள்ளன.யோகா என்றால் அதில் பழவகைகளும் உண்டு :இந்துத்துவத்தின் வகைகள், புத்திசத்தின் வகைகள், ஜைனிசம் என்று வகைகள் உள்ளன.இவற்றின் ஒவ்வொரு பலனையும் செய்முறையும் மேலும் உங்களுடன் பகிர விரும்பிகிறேன் இனிவரும் பக்கங்களில் .

நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக